dhik vijayam
மதுரை சித்திரை திருவிழா – சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.
மதுரை சித்திரை திருவிழா கோலா கோலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமதுரையின் அரசியான மீனாட்சி ஒவ்வொரு நாளும் விதவிதமான பல்லக்கில் பவனி வருவார்.
மதுரையின் பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்டவுடன் எட்டுத்திக்கும்சென்று வென்று வர அம்மன் செல்வதே திக் விஜயம் ஆகும்.
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக் விஜயம், சித்திரை 7, ஏப்ரல் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. காலை ஏழு மணிக்கு அம்மன் நான்கு மாசி வீதிகளிலும் மரவர்ண சப்பரத்தில் எழுந்தருளுவார்.
பிறகு 9:30 மணிக்கு வீதி உலா நிறைவு பெறும். மேலும் மாலை 6:00 மணி அளவில் மீண்டும் இந்திர விமானத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து 11:30 மணிக்கு கோவிலுக்குள் அம்மன் வந்து சேர்வார்.
மாமதுரையின் பேரரசியான மீனாட்சி அம்மை ஆணுக்கு நிகராக அனைத்துப் போர் கலைகளையும் கற்றுத் தெரிந்தவர். பட்டத்தரசி ஆனவுடன் இவர் ஒவ்வொரு திக்குகளுக்கும் சென்று போர் தொடுத்து வெல்கிறார்.
பிறகு கைலாயத்தின் மீது போர் தொடுக்கிறார். அங்கு சிவபெருமானோ மீனாட்சி யார் என அறிந்தவர் ,ஆதலால் போர் தொடுக்க உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ள செல்கிறார்.
ஆனால் மீனாட்சி அம்மனோ சிவபெருமானை பார்த்தவுடன் நாணத்தில் தலை குனிகிறார். தன் மணவாளனை கண்டுவிட்டதை புரிந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து தான் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெற்றது. இதுவே திக் விஜயத்தின் சிறப்பாகும்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…
கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…