கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இந்த சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 30ஆம் தேதி, காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்கு நடைபெறும் என்று கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…