நவகிரகங்களை வழிபடும் சரியான முறையை தெரிஞ்சுக்கோங்க..!

Published by
K Palaniammal

நவகிரகங்கள் -நவகிரகங்களை சுற்றும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள் இருக்கும்.

நவகிரகங்கள் :

பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் இடம் இருந்து வலமாக சுற்ற வேண்டும் எனவும் ராகுவையும் கேதுவையும் வலம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.ஆனால் இது தவறான முறையாகும்.

ஒவ்வொருவருக்கும் பூர்வ புண்ணியத்தின் படி தான் உங்கள் ஜாதகத்தில் கிரக நிலை அமைந்திருக்கும். அனைத்து ஜாதகத்திலும் கிரகநிலை சாதகமாக அமைந்திருக்காது. இதன் விளைவாக தோஷங்கள் ஏற்படுகிறது, அதை நிவர்த்தி செய்ய மக்கள் கோவிலை நாடி செல்கின்றனர்.

நவகிரகங்களை வழிபடும் முறை:

முதலில் கோவிலுக்கு சென்றதும் அங்குள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு விட்டு பிறகுதான் நவகிரகங்களை வழிபட வேண்டும். நவகிரகங்களை வழிபடுவதில் வலபுறம்  இடபுறம்  என குழப்பிக் கொள்ளாமல் மொத்தமாக ஒன்பது சுற்று சுற்றினாலே போதும் . அதேபோல் எந்த கிரகத்தையும் கையில் தொட்டு வணங்க கூடாது .

பலன்கள்:

ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு ஆற்றல் உண்டு .முறையாக வழிபாடும் போது அதன் பலனை நாமும் பெற முடியும் .அப்படி எந்த கிரகத்தை வழிபட்டால் நம் என்ன பலனை பெறுவோம் என தெரிந்து கொள்வோம் .

  • சூரிய வழிபாடு வாழ்வில் ஆரோக்கியத்தையும் மங்கலமும் பெற்று தரும்.
  • சந்திர வழிபாடு வாழ்வில் உங்களை புகழ்பெற செய்யும்.
  • செவ்வாய் வழிபாடு தைரியத்தை தரும்.
  • புதன் வழிபாடு நல்ல அறிவையும் ,தெளிவான சிந்தனையும் பெற்று தரும்.
  • குரு (வியாழன்) வழிபாடு புத்திர பாக்கியத்தையும் செல்வத்தையும் பெற்று தரும்.
  • சுக்கிர வழிபாடு வீடு நிலம் வாங்கும் யோகம், நல்ல வாழ்க்கை துணை ஆகியவற்றை கிடைக்கச் செய்யும்.
  • சனிபகவானை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.
  • ராகு வழிபாடு பயணத்தால் நன்மையை ஏற்படுத்தி தரும்.
  • கேது வழிபாடு மோட்சம் தரும் ,ஞானம் பெருகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

ஆகவே இனிமேல் நீங்கள் கோவிலுக்குள் செல்லும்போது குழப்பம் இல்லாமல் தெளிவாக சென்று மனநிறைவோடும் முழு மனதோடும் வழிபடுங்கள்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago