சித்திரை அமாவாசை அன்று உங்கள் கடன் தீர இந்த எளிய பரிகாரம் போதும்..!

Published by
Sharmi

சித்திரை அமாவாசை அன்று உங்கள் கடன் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள்.

இன்று இந்த வருடத்தின் முதல் அமாவாசை திதியான சித்திரை அமாவாசை திதி ஆகும். இன்று நீங்கள் எப்போதும் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பீர்களோ அதேபோல் திதி தர்பணங்களை கொடுத்து விடுங்கள். இன்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறந்தது. உங்களின் கடன் தீர இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆகும். ஒரு சிறிய சதுர வடிவ மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள், மேலும் ஒரு கைப்பிடி கல்லுப்பு தேவைப்படும்.

பூஜை அறையில் அமர்ந்து கொண்டு முதலில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி உங்கள் கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கையில் இருக்கும் கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு பிரியாணி இலையில் உங்கள் கடன் தொகையை எழுதி அந்த கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள். இதனையும் அந்த மஞ்சள் துணியில் வைத்து, இதனுடன் ஒரு துண்டு வசம்பை வைத்து முடிச்சி போட்டு கொள்ளுங்கள். இந்த மஞ்சள் துணியை வீட்டின் நிலைவாசல் முகப்பில் கட்டி விடுங்கள். அடுத்த அமாவாசை அன்று இதில் இருக்கும் உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும்.

அப்படி கரைக்கும் போது உங்கள் கடன் கரைய வேண்டும் என்று நினைக்க வேண்டும். பின்னர் புதிய ஒரு கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து ஏற்கனவே இருந்த பிரியாணி இலை, வசம்புடன் கட்டி விடுங்கள். இதேபோன்று மாதம் மாதம் வரும் அமாவாசையில் செய்ய வேண்டும். உங்கள் கடன் கரைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கையோடு செய்து வாருங்கள், உங்கள் கடன் பிரச்சனை தீரும். உங்களுக்கு நகை கடன் இருந்தால் பிரியாணி இலையில் நகைக்கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

3 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

3 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago