சித்திரை அமாவாசை அன்று உங்கள் கடன் தீர இந்த எளிய பரிகாரம் போதும்..!

Published by
Sharmi

சித்திரை அமாவாசை அன்று உங்கள் கடன் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள்.

இன்று இந்த வருடத்தின் முதல் அமாவாசை திதியான சித்திரை அமாவாசை திதி ஆகும். இன்று நீங்கள் எப்போதும் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பீர்களோ அதேபோல் திதி தர்பணங்களை கொடுத்து விடுங்கள். இன்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறந்தது. உங்களின் கடன் தீர இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆகும். ஒரு சிறிய சதுர வடிவ மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள், மேலும் ஒரு கைப்பிடி கல்லுப்பு தேவைப்படும்.

பூஜை அறையில் அமர்ந்து கொண்டு முதலில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி உங்கள் கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கையில் இருக்கும் கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு பிரியாணி இலையில் உங்கள் கடன் தொகையை எழுதி அந்த கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள். இதனையும் அந்த மஞ்சள் துணியில் வைத்து, இதனுடன் ஒரு துண்டு வசம்பை வைத்து முடிச்சி போட்டு கொள்ளுங்கள். இந்த மஞ்சள் துணியை வீட்டின் நிலைவாசல் முகப்பில் கட்டி விடுங்கள். அடுத்த அமாவாசை அன்று இதில் இருக்கும் உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும்.

அப்படி கரைக்கும் போது உங்கள் கடன் கரைய வேண்டும் என்று நினைக்க வேண்டும். பின்னர் புதிய ஒரு கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து ஏற்கனவே இருந்த பிரியாணி இலை, வசம்புடன் கட்டி விடுங்கள். இதேபோன்று மாதம் மாதம் வரும் அமாவாசையில் செய்ய வேண்டும். உங்கள் கடன் கரைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கையோடு செய்து வாருங்கள், உங்கள் கடன் பிரச்சனை தீரும். உங்களுக்கு நகை கடன் இருந்தால் பிரியாணி இலையில் நகைக்கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago