திருவிழா

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில்..!! சித்திரை தேர் திருவிழா தொடங்கியது..!!

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. பின்னர் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை)இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் […]

ஆன்மிகம் 3 Min Read
Default Image

சங்கரங்கோவில் சங்கரநாராயண சுவாமி..! கோவிலில் சித்திரை திருவிழா..!! இன்று தொடங்குகிறது..!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு […]

cithirai tiruvizha 3 Min Read
Default Image

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில்..!! சித்திரை திருவிழா கோலகலமாக துவங்கியது..!!

சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் கொடி பவனி தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து 8 மணியளவில் கும்ப ஹோமம் மற்றும் நந்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.30 மணியளவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், […]

abirami cithirai festivel 3 Min Read
Default Image

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்..!! சித்திரைத் திருவிழா கொடியேற்றம்..!!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா வரும் மே 8 ஆம் தேதி முதல் 15 ஆம்  தேதி வரை நடக்கவுள்ளது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று நடைபெற்ற கொடியேற்றத்திற்காக உப்பார்ப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்து புனித அகத்தி முக்கொம்புமரத்தை வெட்டி,  கோவிலுக்கு கொண்டுவந்த முக்கொம்பை கன்னீஸ்வரமுடையார் கோவிலுக்குக் கொண்டு சென்று சிறப்பு பூஜை […]

cithirai 2 Min Read
Default Image

மீனாட்சி அம்மன் கோவில்..!! சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தையொட்டி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய பட்டர்கள் காலை 10 மணியளவில் 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார். பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் […]

#Madurai 3 Min Read
Default Image

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்.! இன்று சித்திரைத் தேர் திருவிழா கோலாகலம்..!!

திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பால்குடம், காவடி, அக்னி சட்டி, குழந்தைகளுக்கான கரும்பு தொட்டில், முளைப்பாரி, கரகம், பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது […]

mariamman 2 Min Read
Default Image

கயத்தாறில் கோவில் திருவிழா…!! தேரோட்டத்தின்போது…!! மழை காரணமாக ஏற்பட்ட சகதியில் சிக்கிய தேர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது சேற்றில் சிக்கிய தேர் இயந்திரங்கள் கொண்டு மீட்க்கப்பட்டது. கயத்தாறில் 100 அண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ரதவீதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக உண்டான சகதியில் தேரின் சக்கரங்கள் சிக்கின. நீண்ட நேரம் போராடியும் வெளியே எடுக்க முடியாததால், ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு […]

kayaththaru 2 Min Read
Default Image

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில்…!! திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம்கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துரசிக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

jallikaddu 2 Min Read
Default Image

அருப்புகோட்டை மாரியம்மன் கோவிலில்..!! முளைப்பாரி திருவிழா…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவிலும் மக்களும்,பக்தர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு முளைப்பரி எடுத்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,      

#ADMK 1 Min Read
Default Image

வடமாநிலத்தில் சைத்ரா நவராத்திரி திருவிழா கோலாகலம்!

சைத்ரா நவராத்திரி விழா வடமாநில நகரங்களில்  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெருந்திரளாக பக்தர்கள் துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலில் சைத்ரா நவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து குகைக்குள் கோவில் கொண்டுள்ள வைஷ்ணவ தேவியை வழிபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

திருச்செந்தூர் அருகே கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் […]

#Thoothukudi 5 Min Read
Default Image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.

karthikai 1 Min Read
Default Image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : மலைஎற்றதுக்கு தடை

திருவண்ணாமலை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவுள்ளது. அதில்  பக்தர்கள் மகாதீபம் ஏற்றும் மலைமீது ஏற தடை விதித்துள்ளது. மேலும் கிரிவல பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதித்துள்ளது. இதனை கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த தீபத்திருவிழா முன்னேற்ப்பாடு குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் R.ஜெகநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா மற்றும் M.ரங்கராஜன், கோட்டச்சியர் உமா மகேஸ்வரி, […]

ஆன்மிகம் 4 Min Read
Default Image