girivalam (1)
கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம்.
கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு செய்வதாகும். கருவறைக்குள் இருக்கும் தெய்வீக அலைகள் நாம் மலையை சுற்றும் போதும் அதன் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
பொதுவாக கிரிவலங்களில் திருவண்ணாமலை சிறப்பு பெற்றதாகும். பெரும்பாலனோர் செல்வதும் அங்குதான். ஆனால் அங்கு மட்டுமல்லாமல் மலை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கூட கிரிவலம் செல்லலாம்.
கிரிவலம் செல்லும் போது மெதுவாகத்தான் நடக்க வேண்டும். விளையாடி கொண்டு ஓடுவது பேசிக்கொண்டு செல்வது இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்வதுதான் சிறந்தது.
நீண்ட தூரம் கிரிவலம் செல்ல வேண்டி இருந்தால் குறைவான உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.
மலைகளை சுற்றி பல சித்தர்கள் வாழ்வார்கள். நாம் கிரிவலம் செய்யும்போது கடவுளின் அருளோடு சித்தர்களின் ஆசியும் ஆற்றலும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும்.அருள் வேண்டுவோருக்கு அம்மாவாசையிலும் பொருள் வேண்டுவோருக்கு பௌர்ணமியிலும் கிரிவலம் செய்யலாம் என்ற வாக்கு கூட உள்ளது.
ஏனென்றால் அந்த தினங்களில் மூலிகைகள் தங்களின் முழு பலனையும் வெளிப்படுத்தும், அதன் அபூர்வ சக்தியும் நமக்கு கிடைக்கும். குறிப்பாக பௌர்ணமி தினத்தில் சில அபூர்வ மூலிகைகள் அதன் ஆற்றலை வெளிப்படுத்தும்.
நம்முடைய வினைகள் மனம், மெய் ,மொழி இவைகளின் மூலம் தான் வரும். இந்த வகையில் இறைவனை நினைத்து நம் உடலை வருத்தி செய்யும் செயலானது நம் வினைகளை நீக்கும், தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் கிரிவலம் செல்லும் போது ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற கிரிவலத்தை வாழ்வில் நாம் ஒரு முறையேனும் வலம் வந்து அந்த மலையைப் போல் நாம் வாழ்விலும் உயர்வோம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…