ஆன்மீகம்

உடைந்த மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்யணும்னு தெரியலையா? அப்போ இந்த பதிவை படிங்க..

Published by
K Palaniammal

நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்திய காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு உடைந்து விட்டால்  என்ன செய்வது மற்றும் பூஜை அறையில் எத்தனை விளக்கு போட வேண்டும் என்பது பற்றியும் எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விளக்கு  என்றாலே அது ஒளியை தரக்கூடிய பொருள். அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் உடைந்து விட்டாலோ அல்லது அந்த விளக்கில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் அதை நாம் பயன்படுத்தக் கூடாது இவற்றை மாற்றி புதிய விளக்குகளை தான் பயன்படுத்த வேண்டும்.

அன்றாடம் ஏற்றி வழிபட்டு கொண்டிருந்த மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்திய விளக்குகள்  பழையதானாலும் சிலர்  ஞாபகத்திற்காக அப்படியே வைத்திருப்பார்கள். அப்படி செய்வது நல்லதல்ல. இந்த விளக்குகளை எல்லாம் நாம் மாற்றி புதிதாக தான் பயன்படுத்த வேண்டும்.

புதிய விளக்குகளை வாங்கிய பிறகு செய்ய வேண்டியவை

நாம் முதன் முதலில் புதிதாக காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு ஏற்றும்போது மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு தட்டில் பச்சரிசி மற்றும் சில்லறைகளை வைத்து அதன் மீது விளக்குகளை வைக்க வேண்டும். பிறகு அதிலே நெய்  ஊற்றி  ஏற்ற வேண்டும். அந்த நெய்யில்  மூன்று அல்லது ஐந்து கற்கண்டுகளை போடலாம் இவ்வாறு செய்வது நல்லது.

பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் தெரியுமா

பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றுவதை விட இரட்டை விளக்குகளை ஏற்றுவது மிகச் சிறப்பாகும், இது அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுக்கும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக நேர்மறை ஆற்றல் இருக்கும்.

வெள்ளி விளக்கின் சிறப்பு

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்கு லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. வெள்ளி விளக்கு ஆடம்பர விளக்காக மட்டும் கருத வேண்டாம்.

எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது

  • பொதுவாக நாம் விளக்கேற்றும் போது அதில் நல்லெண்ணையை ஊற்றி ஏற்றுவது மிகவும் சிறப்பு இது உடல் ஆரோக்கியமாக இருக்க சிறப்பு வாய்ந்ததாகும்.
  • அது மட்டுமல்லாமல் சுத்தமான நெயிலும் விளக்கு ஏற்றலாம். கடையில் வாங்கிய நெய்யை தவிர்க்க வேண்டும்.
  • பஞ்ச கூட்டு எண்ணெய் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கு என்று பலவித மார்க்கெட்டில் கிடைக்கிறது அதையும் தவிர்க்க வேண்டும்.
  • இந்த முறைகளை பயன்படுத்தி விளக்குகளை நாம் மாற்றியும் புதிதாக விளக்கு ஏற்றியும் வாழ்க்கையில் புதிதாக பிரகாசிக்க செய்வோம்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago