House Cleaning-மங்களகரமான நாட்கள் அல்லது நல்ல நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் வீடுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஏனென்றால் வெள்ளி செவ்வாய் என்பது மங்களகரமான நாளாகவும் இறைவழிபாட்டிற்குரிய நாளாகவும் கூறப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில் அந்நாளை வரவேற்கும் விதமாக முன்பே வீடுகளை சுத்தம் செய்து வைத்து விடவும்.
மங்களகரமான அந்த நாட்களை பூஜை செய்வதற்கும் இறைவழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று மங்கலத்தையும் நல்ல சக்தியும் தள்ளக்கூடாது என்பதால் நம் முன்னோர்கள் வெள்ளி செவ்வாய்களில் வீடு சுத்தம் செய்யக்கூடாது என கூறினார்கள்அதைத் தவிர மற்ற ஐந்து நாட்களிலும் வீடுகளை சுத்தம் செய்து கொள்ளலாம். குறிப்பாக திங்கள் வியாழன் கிழமைகளில் வீடுகளை சுத்தம் செய்யலாம்.
முன்பெல்லாம் வீடுகள் மண் தரைகளால் இருந்தது அதனை மொழுகுதல் மட்டுமே செய்ய முடியும். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே வெளியேற்றி தான் செய்ய வேண்டிய நிலை இருந்தது . அதனால் நம்முடைய பெரியோர்கள் முன்கூட்டியே சுத்தம் செய்யும் பணிகளை செய்து முடித்து விடுவார்கள். இதனால் வெள்ளி செவ்வாய் நாட்களில் வீடு சுத்தம் செய்யக்கூடாது என சொல்லி வைத்தார்கள். அதன் பிறகு சிமெண்ட் தரையாக மாறிவிட்டது அப்போதும் பொருட்களை வெளியே எடுத்து வைத்து வீட்டை கழுவி வந்தனர் .
ஆனால் தற்போது அப்படி இல்லை பலரது வீடுகளும் டைல்ஸ் மார்பில் போன்ற தரைகள் வந்து விட்டது இதனை துடைத்தால் மட்டுமே போதும். துடைத்தாலும் கூட நாம் வெள்ளி செவ்வாய்களில் செய்தலை தவிர்க்க வேண்டும், அப்படியே செய்தாக வேண்டுமென்றால் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அதாவது காலை ஆறு மணிக்கு முன்பாகவே சுத்தம் செய்து விட வேண்டும்.
இவ்வாறு முறைகளை நாம் கடைப்பிடித்தால் அந்த வீட்டில் சுபிட்சம் பெருகும், மகாலட்சுமியின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…