வாஸ்து படி வீட்டில் கண்ணாடி ,கடிகாரம் எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?

Published by
K Palaniammal

Vastu-கண்ணாடி மற்றும் கடிகாரத்தை எந்த திசையில் வைக்கலாம் என்றும் வைக்கக்கூடாத இடங்கள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

கண்ணாடி வைக்கும் திசை :

அனைவரது இல்லங்களிலுமே அலங்காரம் செய்வதற்காக கண்ணாடி இருக்கும். இந்த கண்ணாடியை ஒரு சிலர் வீட்டு நிலை வாசலில் வைத்திருப்பார்கள். இவ்வாறு வைப்பது சிறப்பாகவும், மிக அவசியமாகவும் கூறப்படுகிறது.

ஏனென்றால் எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் வருவதை தடுக்கும் சக்தி கண்ணாடிக்கு உள்ளது. கண்ணாடி சந்திரனின் ஆதிக்கம் பெற்ற பொருளாகும் .சந்திரன் ஆனது ஒளியை வாங்கி பிரதிபலிக்கும். அதேதான் கண்ணாடியும் செய்யும். கண்ணாடியை வரவேற்பு அறையிலும் வைத்துக் கொள்ளலாம்.

பூஜை அறையில் வைப்பதால் நேர்மறை ஆற்றலை பெருக்கிக் கொடுக்கும். கிழக்கு மற்றும் வடக்கு திசையில் தான் கண்ணாடி வைக்க வேண்டும். அதாவது கண்ணாடியை கிழக்கு சுவற்றில் மாற்றினால் அது மேற்கு  நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். கண்ணாடியை  செவ்வக வடிவில்  வைத்துக் கொள்வது சிறப்பாகும்.

கண்ணாடியை வைக்க கூடாத இடங்கள்:

கண்ணாடியை படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது கணவன் மனைவியின் அன்னியோனியத்தை பாதிக்கும். ஒருவேளை இருந்தால் அதை இரவில் தூங்கும் போது ஒரு துணியை கொண்டு மூடி வைத்து விட வேண்டும்.

மேலும் கன்னி மூலையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். உடைந்த மற்றும் பழைய கண்ணாடிகளை உடனே மாற்றி விடுவது நல்லது ஏனென்றால் இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

கடிகாரம்:

கடிகாரம் என்பது நேரத்தை பிரதிபலிக்க கூடியது. இது சூரியனை குறிக்க கூடியதாகும். இந்த கடிகாரத்தை கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் தான் மாற்ற வேண்டும். ஓடாத கடிகாரத்தை வைத்திருக்கக் கூடாது. மற்றபடி கடிகாரத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் மரத்தால் செய்யப்பட்ட கடிகாரமும், சனி ஆதிக்கம் பெற்றவர்கள் இரும்பால் செய்யப்பட்ட கடிகாரமும் வைத்துக் கொள்வது சிறப்பாகும்.இவ்வாறு கண்ணாடியும் கடிகாரமும் வாஸ்துவில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

Recent Posts

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

22 minutes ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

1 hour ago

Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்… பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…

2 hours ago

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

3 hours ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

3 hours ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

4 hours ago