தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம்.
அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு படையெடுத்த வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7.45 மணிக்கு மேல் சரியாக 8.45 மணிக்குள் நடக்கிறது.இதனைத் தொடர்ந்து முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியானது நடைபெறும்.
திரு விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக தைப்பூசத் தேரோட்டமானது (21-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் 4 ரத வீதிகளில் உலா வருக்கிறது. மீண்டும் தேர் நிலையை அடையும்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…