தங்கைக்கு தட்டுகளில் சீர்வரிசை அனுப்பிய ரெங்கநாதர் ..! கொள்ளிட ஆற்றில் கோலாகலம்..!!

Published by
kavitha

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் சார்பு கோவிலாக இருந்து உள்ளது.மேலும் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு தங்கையும் சமயபுரத்தின் நாயகியுமாக ஒய்யார நடைபோட்டு வரும் மாரியம்மனுக்கு அண்ணனும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருமானவர் தன் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மற்றும் வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழ வகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை  வழங்கி வருவது வழக்கம்.இதன் படி நேற்று காலை சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடையாக உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கத்தின் வடக்குவாசல் கொள்ளிடக்கரையை தாய் வந்து சேர்ந்தார்.

அம்மாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தாய் தீர்த்தவாரியை  கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தன்னை காண வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்தார்.

அண்ணனான ரெங்கநாதர்  ஸ்ரீ ரங்கம் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள் மற்றும் மாலைகள், சந்தனம் மற்றும் மஞ்சள், பழ வகைகள் மற்றும் தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள் தங்களது தலையில் சுமந்தும் தங்களது கையில் ஏந்தியும் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க   ஊர்வலமாக புறப்பட்டு  வடக்கு வாசல் வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் தாய் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வருகை வந்தனர்.

Image result for சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை

இசை வாத்தியங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வந்த பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை உடன் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அவருடன் உடன் இருந்த  அதிகாரிகள் வழங்கினர்.

இதை அடுத்து அம்மனுக்கு அண்ணன்  ரெங்கநாதர் அனுப்பிய  கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை தங்கையான தாய்க்கு  அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட  பக்தர்கள்  மாரியம்மனை கரகோஷங்கலுடன் வணங்கினர்.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

12 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

30 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

42 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

46 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago