பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மேலும் இதற்கு முன் பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் இருந்து மாலை 5 மணிக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையை அழைத்து வருகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு 6 கலசங்கள் வைத்து அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .
மேலும் 6 வகை அபிஷேகங்களும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை மற்றும் உபசாரங்களும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஓதுவார்கள், வேத விற்பன்னர்கள் பண்பாடி மற்றும் கட்டியம் கூறி மகாதீபாராதனையும் நடைபெற்றது.
தீபாராதனையின் போது பக்தர்கள் அனைவரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, பால தண்டாயுதபாணிக்கு அரோகரா என்று சரண கோஷம் எழுப்பி வணங்கினர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…