சித்திரை திருவிழா 2024 .!கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுவது எப்போது?

Published by
K Palaniammal

சித்திரை திருவிழா 2024- கள்ளழகர் ஆற்றில் எப்போது இறங்குவார், ஏன் இறங்குகிறார் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம் .

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள்.

தேரோட்டம் 2024:

சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாள் தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நேர்முட்டி பகுதியில் காலை 5.15,  மணிக்கு துவங்கி5,40  மணிக்குள் நடைபெறும் .அதைத்தொடர்ந்து ஆறு முப்பது மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுதல் :

சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக  அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரை பத்தாம் நாள் நடைபெறவுள்ளது .

காலை 5 .50 மணியிலிருந்து 6.10க்குள் வைகை ஆற்றில் தங்க குதிரையில் அழகர் எழுந்தருளுவார்.திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்நிகழ்வு தேனூரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அழகர் ஏன் ஆற்றில் இறங்குகிறார் தெரியுமா?

சுதபஸ்[வண்டக  முனிவர் ]  என்ற மகரிஷி கங்கை ஆற்றில் நீராடி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிகிறார். இந்நிலையில் அந்த வழியாக வந்த துர்வாச முனிவரை மகரிஷி கவனிக்காமல் இருப்பதால், துர்வாச முனிவர் அவருக்கு தவளையாக மாறும் சாபத்தை இடுகிறார்.

இதிலிருந்து தனக்கு விமோசனம் கிடைக்க என்ன செய்வது என்று மகரிஷி கேட்டதும்” வைகை ஆற்றில் நீ தவம் செய்து கொண்டிரு சித்ரா பௌர்ணமி மறுநாள்  கள்ளழகர் உமக்கு பாவ  விமோசனம் தருவார் எனக் கூறினார்.

அதேபோல் அழகரும் அன்றைய தினத்தில் வந்து போவதாக புராணங்கள் கூறுகிறது . இதன்  காரணமாக தான் அழகர் ஆற்றில் இறங்குகிறார் . இந்நிகழ்வு சோழவந்தான் அருகில் தேனூரில் நடைபெற்றதாகும்.இன்றும் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

ஆனால் திருமலை நாயக்கர் சைவ மற்றும் வைணவ சமயத்தின் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் ஊர் கூடி தேர் இழுப்பதற்காகவும் கள்ளழகர் மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிழாக்கள் அனைத்து வரலாற்றுச் சிறப்பும் ,பாரம்பரியமும்  மிக்கவை. மனிதர்கள் வாழ்வில் இவை முக்கியமான பகுதி எனலாம் .கொண்டாட்டங்கள் மனிதர்களை புதுப்பிப்பதாக உளவியல் கூறுகிறது .

மனிதர்களின் வறண்ட வாழ்க்கையில் ஆட்டமும் பாட்டமும் நம்மை சலிப்பில் இருந்து விடுபடச் செய்து சமூகத்தோடு உறவாட வைத்து மகிழ்ச்சியும் புத்துணர்வையும் அளிக்கிறது.

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago