மந்திரங்களை உச்சரிப்பதால் மாற்றங்கள் நிகழுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Published by
K Palaniammal

Mantra –மந்திரங்களை கூறுவதன் மூலம் நமக்குள் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம்.

நம்முடைய உடலானது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானபூர்வமான உண்மை. ஒலி  என்ற சத்தம் நமக்கு மகிழ்ச்சியையும் தரும் பயத்தையும் தரும். உதாரணமாக நாம் அமைதியாக இருக்கும்போது இன்னிசை கேட்போம், அப்போது அது மகிழ்ச்சியை தரும் .ஆனால் திடீரென்று ஏதேனும் வெடிப்பது போல் சத்தம் கேட்டால் அது பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும்.

இப்படி ஒலிக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.  ஒலிக்கும் நம் உடலுக்கும் சம்பந்தம் உண்டு. மருத்துவத்தில் ஒலி  அதிர்வு சிகிச்சை என்ற ஒரு  சிகிச்சையே உள்ளது. நாம் பேசும்போதும் அப்படித்தான் சில வார்த்தைகள் நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதுபோல் மந்திரச் சொற்களும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் அகார  ஒகார  இதிலிருந்து பிறக்கக் கூடியது தான் மந்திரங்கள். உதாரணமாக ஓம் என்று உச்சரிக்கும் போது அந்த சத்தமானது நம் காது வலியாக சென்று நரம்பு மண்டலத்தில் ஊடுருவி எங்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்து நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கந்த சஷ்டி கவசத்தில் ஒரு சில வரிகள் உள்ளது ர ர ர ர ர ர ர ரி ரி ரி.. இந்த வார்த்தை எழுத தெரியாமல் இல்லை இந்த சத்தத்திற்கு  என்று ஒரு சக்தி உள்ளது. அது நம் மூளைக்குள் சென்று மாற்றத்தை ஏற்படுத்தும் .இதனால் தான் சக்தி வாய்ந்த மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஏனென்றால் உச்சரிப்பு மாறுபட்டால் அதன் பலனும் மாறுபடும். பயம் இருந்தால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கச் சொல்வார்கள் அதை  படிக்கும்போது அந்த வார்த்தைகள் நமக்குள் சென்று தைரியத்தை ஏற்படுத்தும் .இது உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

மேலும் மந்திரங்கள் உடலுக்கு உஷ்ணத்தை தரும் ,ஆத்ம சக்தியை அதிகப்படுத்தி சரியான இயக்கத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும். நாம் சோர்வுற்று இருக்கும்போது சில தன்னம்பிக்கையான வார்த்தைகளை கேட்கும் போதும் பார்க்கும் போதும் நமக்குள் ஒரு தைரியமும் மாற்றமும் நிகழ்கிறது தானே..

அப்படிப்பட்ட சாதாரண வார்த்தைகளுக்கே சக்தி  இருக்கும்போது கடவுளின் மந்திரங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். ஆன்மீகமும் கடவுள் நம்பிக்கையும் வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அதை உணர்வு பூர்வமாக மட்டுமே உணர முடியும். அதை உணர்ந்தவர்கள் அதன் பலனை பெற்றிருப்பார்கள்.

Published by
K Palaniammal

Recent Posts

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

13 minutes ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

48 minutes ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

1 hour ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

1 hour ago

இனி பல்கலைக்கழக வேந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்., ஆளுநருக்கு எதிரான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ….

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…

2 hours ago

குருநாதரை ஓவர் ட்ராக் செய்யும் அட்லீ… அல்லு அர்ஜுனை வைத்து புது முயற்சி.!

சென்னை :  புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…

2 hours ago