தமிழ் வருடப்பிறப்பு செல்வச்செழிப்புடன் அமைய இந்த 5 பொருட்களை இன்று வாங்குங்கள்..!

Published by
Sharmi

தமிழ் வருடப்பிறப்பு செல்வச்செழிப்பை தர இந்த 5 பொருட்களை இன்று வாங்குங்கள்.

இன்று சித்திரை மாதம் முதல் நாள்(14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று அனைவருக்கும் நன்மை அளிக்கும் விதமாக மிக விஷேசமான தினத்தில் தமிழ்வருடப்பிறப்பு நிகழ்ந்துள்ளது. இன்றைய நாளில் பிரதோஷம் இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் முக்கிய தினங்களில் ஒன்றான பிரதோஷம் இன்று. அதுவும் வியாழக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் இன்றைய தினத்தில் நடைபெறுகிறது.

இதுவும் இந்த வருடப்பிறப்பான முதல் நாளில் நிகழ்வது கூடுதல் சிறப்பு என்றே கூறலாம். ஒரு நாளின் தொடக்கம் அல்லது ஒரு புதிய விஷயத்தின் தொடக்கம் நன்றாக அமைய நாம் கடவுளுக்கு பூஜை செய்வது வழக்கம். அதுபோல் ஒரு புதுவருடம் இன்று பிறந்துள்ளது. இந்த வருடம் சிறப்பானதாக அமைய நாம் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று கடவுளை பிரார்த்திப்பது. மேலும், முதல் நாள் நன்மை அளிக்கும் விதமாக அமைந்தால் இவ்வருடம் முழுவதும் அனைத்திலும் நன்மையே நடக்கும் என்பதால் இன்று நாம் நம் வாழ்வில் செல்வச்செழிப்போடு இருக்க என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் வீட்டை சுத்தமாக கழுவி துடைக்க வேண்டும். பின்னர் உங்கள் வீட்டில் உள்ள கடவுள் சிலை மற்றும் படங்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். அனைத்து பூஜை சாமான்களுக்கும் புதிதாக மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் பூ வைத்து பூஜை அறையை தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இன்று முதலில் வாங்க வேண்டிய பொருள் மகாலக்ஷ்மி வாசம் செய்ய கூடிய பொருளான கல் உப்பு. உப்பு வீட்டில் நிறைவாக இருப்பது பணவரவு நிறைவாக இருக்க உதவும்.

அடுத்ததாக உங்கள் புதுவருடம் இனிமையானதாக அமைய வெல்லம் வாங்க வேண்டும். அல்லது நாட்டுச்சர்க்கரை/பனங்கற்கண்டு வாங்கலாம்.மூன்றாவதாக மஞ்சள் வாங்க வேண்டும். நான்காவதாக கனிகளில் சிறப்பு வாய்ந்த எலுமிச்சை கனியை வாங்கிக்கொள்ளுங்கள். ஐந்தாவதாக பச்சரிசியை வாங்க வேண்டும். இந்த 5 பொருட்களும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் வாங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு மேம்படும். இந்த 5 பொருட்களுடன் கடவுளுக்கு பழங்கள் வைத்து பூஜை செய்வது உங்கள் வருடமும் உங்கள் வாழ்க்கையும் சிறப்பானதாக  அமையும்.

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

4 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

5 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

6 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

7 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

8 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

10 hours ago