ஆடை தானம் செய்வதால் இவ்வளவு நன்மை இருக்கா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Published by
K Palaniammal

ஒரு மனிதனுக்கு உயிர் பெரிதா மானம் பெரிதா என்ற கேள்வி வந்து விட்டால் மானம்தான் பெரிது என அனைவரும் கூறுவோம், ஏன் வள்ளுவர் கூட ஒரு குரலில் உயிரை விட மானம்தான் பெரிது எனவும் மானம் போன பிறகு வாழ்வது உயிரற்ற உடலுக்கு சமமானது என்றும் கூறியுள்ளார், எனவே உயிரை விட மானத்தைக் காக்கக்கூடியது இந்த ஆடைதான் ஆடை என்பது ஆடம்பரமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பார்ப்பதற்கு அழகாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும் .

முந்தைய காலகட்டத்தில் ஆடை வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை எடுத்துக் கொண்டோம் அதாவது தீபாவளி, பொங்கல் ,பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் எடுப்போம். அதனால் ஆடை மீது ஒரு மதிப்பு மரியாதை அதைப் பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். தற்போது அது மாறிவிட்டது எனலாம்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…

ஆனால் இன்றும் பல பேருக்கு புத்தாடை  என்பது ஒரு கனவாக தான் உள்ளது. ஒரு முறை கிடைக்குமா என்பதே ஏக்கமாக இருக்கும் குழந்தைகளும் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஆடையை தானமாக கொடுக்கும்போது முதலில் அவர்களுக்கு அது மகிழ்ச்சியை கொடுக்கும் பழம் பலன் என்பது இரண்டாம் பட்சம்தான்.

ஆடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

  • கன்னி தோஷம் என்ற தோஷம் நீங்கும்.
  • வாழ வேண்டிய வயதில் மரணம் ஏற்பட்டால் அது கேட்பவர்களுக்கு கூட வருத்தத்தை ஏற்படுத்தும் இந்த மாதிரி இளம் வயதில் மரணம் நிகழாமல் இருக்கும், அது மட்டுமில்லாமல் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
  • எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பது மாறி தொட்ட காரியம் வெற்றி அடையும் இதற்கு இந்த ஆடை தானம் துணை செய்யும்.
  • பழைய ஆடைகளை கொடுக்கும்போது கிழிந்து மிகவும் பயன்படுத்த முடியாதவற்றை கொடுக்கக் கூடாது. ஓரளவு பயன்படுத்துமாறு இருந்தால் தானமாக கொடுக்கலாம். முடிந்தவரை பழைய ஆடைகளை கொடுப்பதை தவிர்க்கலாம்.
  • எனவே தீபாவளி பொங்கல் என ஏதேனும் ஒரு பண்டிகையில் ஏழை குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு புத்தாடைகளை கொடுத்து அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்ச்சியடைந்து வாழ்வோம்.
Published by
K Palaniammal

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

14 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

18 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

19 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

19 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

19 hours ago