ஆன்மீகம்

ஆஹா! திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கு இவ்வளவு சிறப்பா …

Published by
K Palaniammal

கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவில் வருவது திருவண்ணாமலை தீபம் தான் . எத்தனையோ  கோவில்கள் இருந்தாலும் கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பெற்றது இந்த திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலம் ஆக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாகவே இருப்பதாக நம்பப்படுகிறது. முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்த ஸ்தலமாகவும் கூறப்படுகிறது திருவண்ணாமலையில் பத்து நாள் முன்பாகவே கொடியேற்றம் செய்யப்படும்.

கொடியேற்றத்தில் சிறப்பு

இந்த பத்து நாட்களும் பல்வேறு பூஜைகளும், வாகனப் புறப்பாடும் நடைபெறும். நவம்பர் 23ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதை எடுத்து பத்தாவது நாள் திருக்கார்த்திகை தீபத்தன்று காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறைக்கு எதிரே பரணி தீபம் ஏற்றப்படும்.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

மாலை நேரம் , சிவன் அர்த்தநாதீஸ்வரர்  ரூபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி வருவதை வருடத்தின் ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும். மாலை 6:00 மணிக்கு மலை மேல் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

மலை மேல் ஏற்றப்படும் தீபத்தின் சிறப்பு

மலை மேல் சுமார் ஆறு அடி உயரமும் 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் சுமார்  3500 கிலோ விற்கும் மேல் நெய்யை ஊற்றி, ஆயிரம் மீட்டருக்கு மேல் காடா துணியை திரியாக்கி கற்பூரத்துடன் சேர்த்து தீபம் ஏற்றப்படும். மலையின் மேல் ஏற்றப்படும்  தீபம் பத்து நாட்களுக்கு மேல் எரிந்து  கொண்டே இருக்கும் .மலையைச் சுற்றி சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தீபத்தை தரிசிக்கலாம்.பிறகு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள் ,மலையை சுற்றிலும் சிவனடியார்களால் அன்னதானம் வழங்கப்படும் .இங்கு விளக்கேற்றிய பிறகே அனைவரது இல்லங்ககளிலும் விளக்கேற்ற படுகிறது .

மற்ற கோவில்களில் ஏற்றப்படும் தீபங்கள் 

இத்திரு  கார்த்திகை அன்று முருகப்பெருமான் ஆலயத்தில் குமாரலாய  தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவ ஆலயங்களில் பௌர்ணமி அன்று சர்வாலய தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் பெருமாள் கோவில்களில் விஷ்ணு ஆலய தீபம் ஏற்றப்படுகிறது. இத்தனை சிறப்புகள் கொண்ட திருக்கார்த்திகை அன்று ஒரு முறையேனும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசித்து மழையின் மேல் ஏற்றப்படும் ஜோதியை கண்டு வாழ்வில் பிரகாசத்தை காண்போம்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

23 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

29 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

46 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago