பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

Published by
K Palaniammal

முந்தைய காலங்களில் பூஜை அறைகளில் கண்ணாடி வைத்து வழிபடும் முறையும்  இருந்து வந்தது. இந்த கண்ணாடியை ஏன் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கண்ணாடியின் தனித்துவம் :

பொதுவாக கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து  பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன் வைக்கும் போது கண் திருஷ்டியையும் நீக்குகிறது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதை கண்ணாடி முன் நின்று கூற வேண்டும் என கூறுவார்கள் ஏனென்றால் அது தன் முன் இருப்பதை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டது.

பூஜை அறையில் கண்ணாடியை வைத்து நாம் வழிபடும்போது நம் உடலின் நாடியை திறக்கும் எனக் கூறப்படுகிறது. தெய்வத்தின் அருகில் இதை வைக்கும் போது தெய்வ நாடியும்  மனித நாடியும்  ஒன்று சேரும் ,இதனால் நம் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற்றப்படும். மேலும்  நம் பிரார்த்தனைகள் பலிக்கும்.

கண்ணாடியை பூஜை அறையில் வைக்கும் முறைகள்:

கண்ணாடியை பூஜை அறையில் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கிய திசையில் வைக்க வேண்டும்.புதிய கண்ணாடி மட்டுமே வைக்க வேண்டும் . கண்ணாடி மகாலட்சுமியின் ஆதிக்கம் பெற்ற பொருளாகும்.

கண்ணாடி முன் வைக்க வேண்டிய பொருள்கள்:

கண்ணாடியின் முன்பு நமக்கு என்ன தேவையோ அதை ஒரு கண்ணாடி பவுலில் வைக்க வேண்டும். அதாவது ஒரு கண்ணாடி பௌலில் பச்சரிசி வைத்து அதிலே மஞ்சள் மற்றும் நாணயங்கள் சேர்த்து அதன் பிம்பம் கண்ணாடியில் படும் மாதிரி வைக்க வேண்டும். இல்லையென்றால் கண்ணாடி பவுலின் கல் உப்பு, மஞ்சள், நாணயம் இவற்றையும் வைக்கலாம். அல்லது வெறும் நாணயங்கள் மட்டுமே வைக்கலாம். இப்படி உங்களுக்கு எது ஏதுவாக உள்ளதோ அதை வைக்கலாம். மேலும் பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வரும்போது நம் மூதாதையரின் நல் ஆசியையும் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆகவே நமது பூஜை அறையில் சிறு சிறு மாற்றங்களை செய்து நம் வாழ்வில் பெரிய மாற்றங்களை காண்போம்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago