வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருமொழித் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
பகல்பத்து விழாவின் 9-ம் நாளில், ஸ்ரீ நம்பெருமாள், முழுவதும் முத்தால் ஆன முத்தங்கி அலங்காரத்தில், மார்பில் மஹாலெக்ஷ்மி பதக்கம் முத்து அபயஹஸ்தம், முத்துமாலை, முத்து குல்லாய், வைரத்தால் ஆன அர்த்தசந்திர ஹாரம், நெத்திச்சுட்டி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…