மதுரை போற்றும் “மீனாட்சி” திருக்கல்யாணம் எவ்வாறு நடந்தது…??

Published by
kavitha

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம் ஏனென்றால் அம்பாள் இப்பூவுலகில் அவதரித்து அகிலாண்ட நாயகனை அடைந்தாள் என்பதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாணம் வைபம் நடைபெறுகிறது

மீனாட்சி திருக்கல்யாண வரலாறு…!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு கொண்டாடியது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றதும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.


திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அந்த அனுபவம் நினைவு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, கயிலையை வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை மீனாட்சி முதன் முதலாக சந்தித்தாள் சிவபெருமானின் அருள்பார்வை பதிந்த அந்த நிமிடத்தில் மீனாட்சியின் மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போனது. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி நாணம் கொண்டாள் . ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை மீனாட்சி நினைத்து மகிழ்ந்தாள்.

அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த காத்திருந்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்கள் உள்ளிட்டவர்களும் புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த நிலையில் இருந்து மாறி சுந்தரேசுவராக-மதுரை மாப்பிள்ளையாக மதுரைக்குவந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக சிவபெருமான் கரம் பிடித்தார்.

திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமே…?

அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. ஆனால் ஒரு பகுதி மட்டுமே காலியானது. இதையறிந்த மீனாட்சி, இது பற்றி சிவபெருமானிடம் கூறினார்.உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தாரமீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்

அடுத்த நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். இருவருக்கும் தாகம் ஏற்பட்டது தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தும் தாகம் அடங்கவில்லை. பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

தாகம்… தாகம்… என்று கத்தினார். அப்போது சிவபெருமான் அவர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டாக, தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை’’ ஆயிற்று.

மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,

Published by
kavitha

Recent Posts

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

23 mins ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

58 mins ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

4 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 day ago