புகழ்பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் வைகாசி விசாக பெருவிழா..!!

Default Image

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. 

நாளை(சனிக்கிழமை) காலை 6.40 மணிக்கு மேல் கொடியேற்றமும், மாலை ஆன்மிக சொற்பொழிவும், மகாலட்சுமி குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந்தேதி இரவு 7 மணிக்கு காந்திமதியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 23-ந்தேதி பச்சைக்காளி, பவளக்காளியுடன் சிவன், சக்தி மற்றும் காவடி கரகாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதி இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 28-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரியும் நடக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்