வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர்:தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேராட்டம் கோலாகலம்..!!

Default Image

வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் சிறப்பு வாய்ந்தது.

இச்சிறப்புமிக்க ஆழித்தேரோட்டத்தையொட்டி கடந்த 20ஆம் தேதி தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து ஆழித்தேருக்கு எழுத்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தேரடியில் இருந்து கீழரத வீதியில் புறப்பட்ட இந்த தேரோட்டம் ஆரூரா,தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் அசைந்தாடியபடி புறப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட எஸ். பி தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்