திதியால் விதி மாறுமா..?? என்ன சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம்..!!
ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும் இயற்கையையும் இறைவனையும் மையமாகவே கொண்டு செயல்படுகிறது.அதனை அறிந்து செயல்பட்டால் வெற்றி மட்டுமல்லாமல் இறைவனின் அருளையும் பெறலாம் என்பது ஜோதிட வாக்கு.
அதன் படி நாம் நல்ல சுப நிழ்வுகளை நல்ல நேரத்தில் செய்ய விருப்பம் கொள்வோம்.அதுமட்டும் அல்லாமல் இது அனைத்து நிகழ்வுகளுக்கும் நேரம் ,நாள் நட்சத்திரம் என்று பார்த்து அதை செய்கிறோம் எதற்காக எப்படி செய்கிறோம் என்றால் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் நல்லதாகவே தோடர வேண்டும் என்று சிலர் கூறுவார்கள் உண்மை தான்.
அதாவது நேர்மறையான எண்ணங்களை கொண்ட கிரக அமைப்புகள் வரும் தினத்தில் நாம் நல்ல நிகழ்வுகளை செய்வதன் காரணமாக நமக்கும் நல்ல எண்ணங்களை மேலோங்கும்,எந்த வித சங்கடங்களும் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.மாறாக செய்யும் போது எதிர்மறையான ( negative vibes) எண்ணங்கள் மேலோங்கும்.இதனால் தான் சாஸ்திரம் அதற்கேன்று ஒரு கணித சாஸ்திரம் மற்றும் நாள் ,கோள் என்று சொல்லி வைத்துள்ளனர்.
அப்படி நாள் -கோள் -திதி என்று கூறுவோம் இதில் நம்மில் சிலருக்கு திதி பற்றி அவ்வளவு புரிதல் நமக்கு கிடையாது .ஆனால் திதி பார்த்து செய்தால் நம் விதி மாறும் என்பது நம்மில் சிலருக்கு தான் தெரியும்.
விதியை மாற்றும் திதியை பற்றி அறிவோம் த்தியை அடிப்படையாக கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும்.நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமானாமனால் நாளை அடிப்படையாக வைத்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.பாவங்களை அகவ வேண்டுமானால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்.
நோய்கள தீர வேண்டுமானால் யோகத்தை அடிப்படையாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.காரிய வற்றி ஏற்பட கரணங்களையும் நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து புசித்து வழிபட வேண்டும்.இவ்வாறு திதி ,நாள்,யோகம்,கரணம் ,நட்சத்திர ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாக கொண்டு தான் பஞ்சங்கத்தை பார்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில் உங்கள திதிக்கு உரிய தெய்வத்தை வழிப்பட்டால் உங்கள் விதியை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு.அதுமட்டுமல்லாம் வெற்றியையும் கிடைக்க செய்யும்.அதே நேரத்தில் நட்சத்திரமும் இணைந்து இருந்தால் மிகவும் நல்லது.ஆகையால் அவரவர் திதிக்கு உரிய தெய்வத்தை வணங்கினால் அந்த திதிக்குரிய தெய்வம் நம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.