சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா..!!வெகு சிறப்பாக நடைபெற்றது..!!

Default Image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள இந்த ஆலயம் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புனரமைக்கப்பட்டு கும்பாபிசேக விழா இன்று நடைபெற்றது . இதையொட்டி கடந்த 22ஆம் தேதி முதல் 3 கால வேள்விகள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இன்று காலை புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்  யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்