கும்பாபிஷேகம் நடத்த இவ்வளவு வழிமுறைகளா?!

Published by
மணிகண்டன்

கும்பாபிசேகம் செய்யும் போது கும்பமானது  கடவுளின் உடலாகவும்,  சுற்றப்பட்ட நூல் நாடி நரம்புகளையும், உள்ளே இருக்கும் தீர்த்தமானது, ரத்தமாகவும், அதற்குள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே இருக்கும் தேங்காய் தலைப்பகுதியாகவும், கும்பத்திற்கு கீழே பரப்பிய தானியம் ஆசனமாகவும் கருதப்படுகிறது. கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும் முறைகளை கீழே காணலாம்.
தெய்வசக்தி கும்பத்திற்கு மாற்றம் : கும்பம் ஒன்றை கோவிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் சொல்லப்பட்டு, தெய்வ சக்தி கும்பத்திற்கு மாற்றப்படும். பின்னர், அந்த சக்தி வேறொரு இடத்தில் உள்ள மரத்தால் செய்யப்பட்ட உருவத்திற்கு மாற்றப்பட்டு, கும்பாபிஷேகம் முடியும் வரை அதற்கு பூஜைகள் செய்யப்படும்.
தெய்வ சக்திகளை கும்பதிர்க்குள் வரவழைக்க செய்யும் பூஜை  கும்பத்தில் உள்ள நீருக்குள், தெய்வ சக்திகளை வரவழைக்கச் செய்வது ‘ஆவாகனம்’ எனப்படும். கும்பத்தை கோவிலில் உள்ள தெய்வ சிலை அருகில் வைத்து, தர்ப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு மந்திரங்கள் கூறி, பிம்பத்தில் உள்ள தெய்வ சக்தியை கும்பத்திற்கு வர செய்வார்கள்.
கும்பாபிஷேகம் : கும்பாபிஷேகம் நடக்கும்போது, ஒரு கால பூஜைக்கு 64 கிரியைகள் வரை முன்பு செய்யப்பட்டன. ஆனால் தற்போது உள்ள கால அவசரம் கருதி, முக்கியமான 13 அல்லது 12 கிரியைகள் மட்டும் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப் படுகிறது.
 ஆசாரிய வர்ணம் (தன பூஜை) : கும்பாபிஷேகத்தின் போது கிடைக்கும் பொருட்களுக்கு பூஜை செய்யப்படுவது தன பூஜை ஆகும். கும்பாபிஷேகத்தின் போது கிடைக்கும் பொருளின் ஒரு பகுதி கட்டிட வேலைக்கும், ஒரு பகுதி விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்துக்கும், மூன்றாவது பாகம் ஆபரணங்கள் வாங்கவும் செலவிடப்படும். மேற்கண்ட செல்வத்தைக் கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி தர கேட்டுக்கொள்வது ‘ஆசாரிய வர்ணம்’ ஆகும்.
அனுக்ஞை (கும்பாபிஷேகம் நடத்தும் நபரை தேர்ந்தெடுத்தல்) : கட்டிட வேலைகள் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த தகுதியான நபரை விநாயகர் முன்னிலையில் தேர்ந்தெடுப்பது அனுக்ஞை எனப்படும்.
பிரவேச பலி : கும்பாபிஷேகம் நடக்கும் இடத்தில் எட்டு திசைகளிலும் உள்ள சகல ராட்சதர்களுக்கும் தேவதைகளுக்கும் உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும்படி வழி அனுப்புவது பிரவேச பலி ஆகும். திருவிழா சமயங்களிலும் இதனை செய்ய வேண்டும்.
வாஸ்து சாந்தி : வாஸ்து பகவானால் கும்பாபிஷேக கிரியைகளுக்கு எவ்விதமான தடங்களும் நேராதவாறு, பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால்  செய்து சாந்தபடுத்துவது ‘வாஸ்து சாந்தி’ ஆகும்.
காப்பு கட்டுதல் : மந்திரித்த மஞ்சள் கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள்.
கட ஸ்தாபனம் (கலசம் அமைத்தல்) : தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் செய்யப்பட்ட கலசம் என்ற கும்பங்கள் பயன்படுத்தப்படும். கும்பத்தில் நூல் சுற்றி, ஆற்று நீர் நிரப்பி, மேல் பகுதியில் மாவிலை செருகி, தேங்காய் வைக்கப்படும். எந்த தெய்வத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறதோ அந்த தெய்வத்தின் உடலாக குறிப்பிட்ட கும்பம் கருதப்படும்.
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் :  பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து திருவுருவங்கள் மீது, சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே ‘அஷ்ட பந்தனம்’ என பெயர்.
மிருத்சங்கிரஹணம் (நவதானியங்களை வளர்ப்பது ) : கும்பாபிஷேக விழாவிற்கு முன்னர் நவதானியங்கள் முளைவிட்டு வளர வைக்கப்படும். அதற்காக சுத்தமான மண் எடுக்கப்பட்டு முளைப்பாரியில் வைத்து, அதற்குள் நவதானியங்களை இட்டு வைப்பார்கள். இவ்வாறு தானியங்களை வளர வைப்பது ‘மிருத்சங்கிரஹணம்’ என்று பெயர்.
source : dinasuvadu.com
 

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago