கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் காலையில் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசிவிஸ்வநாதர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை மண்டகப்படி, சமய உரை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.
இரவு இன்னிசை நிகழ்ச்சி, அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தொழில் அதிபர் எம்.கோபி ஒரு ஜோடி வெள்ளி கொலுசை திருவிழாவை காணவந்த ஒரு சிறுமிக்கு தானமாக வழங்கினார். அதன்பின்பு பூப்பந்தல் வாகனத்தில், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…