இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில் ‘தீக்குளித்தவர்’ கைது…!!

Published by
kavitha

கரூர் அருகே நானபரப்பில் மாரியம்மன் கோவில்உள்ளது.இந்த கோவிலில் திருவிழா நடத்துவதுதொடர்பாகஇருதரப்பினரிடையே நெடுங்காலமாக பிரச்சினை இருந்து  வருகிறது.இதனால்கோவிலைஇந்துசமயஅறநிலைய துறை கடந்த 4 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது.இந்நிலையில் தக்காராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிலில் இன்று பூச்சாற்றுதல் விழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தக்கார் ராதாகிருஷ்ணன் கோவிலில் திருவிழா நடத்த கூடாது எனவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பு திருவிழா நடத்த வேண்டும் எனவும், அதுவரை கோவில் விழா நடைபெற அனுமதி இல்லை என அறிவிப்பு நோட்டீசை கோவிலில் நேற்று ஒட்டினார். மேலும் இரு தரப்பினரிடமும் கையெழுத்து பெற்றார்.

தீக்குளிக்க முயற்சி

திருவிழா நடத்த ஏற்பாடு செய்த தர்மகர்த்தா முத்துசாமி ,சுரேஷ் மற்றும் அவருடன் மேலும் 2 பேர் நேற்று மாலை கரூரில் சாமிநாதபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திருவிழா நடத்தக்கூடாது எனவும் அறிவிப்பு நோட்டீசில் கையெழுத்து பெற்றதை திருப்பி வழங்க கோரியும், கோவில் பொறுப்பை மீண்டும் தங்களிடம் வழங்க கோரியும் சுரேஷ் சற்றும் எதிர் பார்க்காத  நேரத்தில் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் விரைந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,

Published by
kavitha

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago