இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில் ‘தீக்குளித்தவர்’ கைது…!!

Default Image

கரூர் அருகே நானபரப்பில் மாரியம்மன் கோவில்உள்ளது.இந்த கோவிலில் திருவிழா நடத்துவதுதொடர்பாகஇருதரப்பினரிடையே நெடுங்காலமாக பிரச்சினை இருந்து  வருகிறது.இதனால்கோவிலைஇந்துசமயஅறநிலைய துறை கடந்த 4 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது.இந்நிலையில் தக்காராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவிலில் இன்று பூச்சாற்றுதல் விழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தக்கார் ராதாகிருஷ்ணன் கோவிலில் திருவிழா நடத்த கூடாது எனவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட பின்பு திருவிழா நடத்த வேண்டும் எனவும், அதுவரை கோவில் விழா நடைபெற அனுமதி இல்லை என அறிவிப்பு நோட்டீசை கோவிலில் நேற்று ஒட்டினார். மேலும் இரு தரப்பினரிடமும் கையெழுத்து பெற்றார்.

தீக்குளிக்க முயற்சி

திருவிழா நடத்த ஏற்பாடு செய்த தர்மகர்த்தா முத்துசாமி ,சுரேஷ் மற்றும் அவருடன் மேலும் 2 பேர் நேற்று மாலை கரூரில் சாமிநாதபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திருவிழா நடத்தக்கூடாது எனவும் அறிவிப்பு நோட்டீசில் கையெழுத்து பெற்றதை திருப்பி வழங்க கோரியும், கோவில் பொறுப்பை மீண்டும் தங்களிடம் வழங்க கோரியும் சுரேஷ் சற்றும் எதிர் பார்க்காத  நேரத்தில் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் விரைந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்