Categories: க்ரைம்

நெல்லையை அதிரவைத்த படுகொலை.! தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம்.!

Published by
மணிகண்டன்

நெல்லை: மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. 2012இல் கொலை செய்யப்பட்ட தேவேந்திரகுள வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தீபக் ராஜா கடந்த 20ஆம் தேதி நெல்லை கே.டி.சி நகர் பகுதியில் நெல்லை – திருச்செந்தூர் சாலையில் உள்ள உணவகத்தில் தனது காதலியுடன் உணவு அருந்திவிட்டு வெளியே வந்த போது பட்டப்பகலில் ஓர் மர்ம கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்தியிலேயே தீபக் ராஜா உயிரிழந்தார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். லெப்ட் முருகன், நவீன் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளை கண்டறியும் வரையில் தீபக் ராஜா உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரின் உறவினர்கள் கூறிவந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு , காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று தீபக் ராஜா உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரித்துள்ளனர்.

இதனை அடுத்து  நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டுள்ள தீபக் ராஜா உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால், நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றைப்பு பகுதி வரையில் நெல்லை மாநகர் முழுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

31 minutes ago
“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

4 hours ago
நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

4 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

5 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

6 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

6 hours ago