Periyar50 : தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.! 

சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி ஒழிப்புக்காக கடுமையாக போராடிய சமூக நீதிப் போராளியாகும் விளங்கும் மறைந்த தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கீ.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர், தி.க திடலில் இருந்து அமைதி ஊர்வலமாக அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, சேகர்பாபு, அன்பில் மகேஷ், துரைமுருகன், ஆகியோரும் சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரும், திமுக முக்கிய பிரமுகர்களான ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.