இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து கடைகளும், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வேண்டுகோளின் பேரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஊரடங்கு உத்தரவை மதித்து, இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இயக்குநர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வீட்டில் இருக்கும் பொழுது தான் இயக்கிய அச்சம் என்பது மடமையாடா, என்னைஅறிந்தால் ஆகிய திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனென்றால், “அச்சம் என்பது மடமையாடா” திரைப்படத்தில் சிம்பு தனது காதலியைக் கூட்டிக் கொண்டு ஒரு சாலைப் பயணம் செல்வார்.’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித் தன் மகளை ஊர் ஊராகக் கூட்டிச் செல்வார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதைச் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
“வாரணம் ஆயிரம்” படத்தை பாருங்கள். அதில் கடினமான தருணங்களில் எப்படி நம்மை தயார்படுத்தி மீண்டு வரலாம் என அந்த படத்தில் காட்டப்பட்டு இருக்கும் என கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…