500 கோடி பட்ஜெட்..ராவணன் வேடத்தில் யாஷ்…ராமாயணம் பட செம அப்டேட்.!

Published by
கெளதம்

Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார்.

அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம், பிரமாண்டமாக உருவாகவுள்ள “ராமாயணம்” படத்தை  யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இந்த படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதாவாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது குறித்து ஏப்ரல் 17 -ஆம் தேதி ராம நவமி அன்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

16 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

6 hours ago