கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்தும் படங்களும் மக்கள் மத்தியில்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்தும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்  சினிமாவில் மட்டும் அக்கறை  செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் பட்டாக்கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் சண்டையிட்டுள்ளனர். இதுகுறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பதிவில், ” மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியை கண்டது அச்சமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இந்த சிறு வயதிலேயே காதல் வந்தால்,அது இதயத்தை மென்மையாக்கும், கல்வி பயின்றால், அது வாழ்வை மேன்மையாக்கும். மேலும், கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே உனக்கு எதிரியாக மாறிவிடும்” என பதிவிட்டுள்ளார்.

unknown node
கையில் ஆயுதம் எடுத்தால், எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும் : நடிகர் விவேக்