Categories: சினிமா

சிறகடிக்க ஆசை இன்று: முத்துவிற்கு சப்போர்ட் செய்யும் விஜயா..

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை சீரியல்– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் [ஜூன் 11] இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

முத்து தன் நண்பரிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது எப்போதும் போல் எதர்ச்சியாக பேசிய வார்த்தையால் மனமுடைந்த மீனா வீட்டை விட்டு சென்று விடுகிறார். இந்த நிலையில் இன்று ரோகினி சமையல் செய்திருக்கிறார். இதை மனோஜ் , விஜயா, ரவி சாப்பிட்டுக் கொண்டே ரோகினியின் சமையலை கிண்டல் அடிக்கிறார்கள்.

விஜயா அண்ணாமலையிடம் சாப்பிட வருமாறு கூப்பிடுகிறார். அண்ணாமலை மீனாவை காணாத பதட்டத்தில் இருக்கிறார். அப்போதும் மீனாவை விஜயா திட்டுகிறார். அதற்கு அண்ணாமலை, மீனாவை காணோம் என்ற அக்கறை கூட இல்லை அப்போ சமைக்க மட்டும் தான் மீனா வா என்று திட்டுகிறரர்.

இப்போது அங்கு முத்து வருகிறார். அண்ணாமலை முத்துவிடம், நீ மீனாவிடம் சண்டை போட்டியா என கேட்கிறார். இல்லை அப்பா என கூறிவிட்டு தன் நண்பனிடம் பேசியவற்றை கூறுகிறார். ஒருவேளை இதை தவறாக புரிந்து கொண்டு விட்டாலோ  என சொல்கிறார். அதனால் அண்ணாமலையும் முத்துவை திட்டுகிறார்.

விஜயா இப்போது முத்துவிற்கு சப்போர்ட் செய்யும் விதமாக  இன்னும் ஏன் அவளை தலையில் கட்டிக்கிட்டு இருக்கணும் போகட்டும் விடுங்க என சொல்கிறார். இப்போது மீனா ஓட தங்கச்சி முத்துவிற்கு ஃபோன் பண்ணி கந்து வட்டி சுதாகர் மீது சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்.

முத்து கந்து வட்டி சுதாகரை பார்க்க செல்கிறார். அவர் கை கால்களில் அடிபட்டு படுத்திருக்கிறார். அவரைப் பார்த்த முத்து இந்த நிலையில் மீனாவே கடத்தியிருக்க  வாய்ப்பில்லை என புரிந்து கொள்கிறார்.

மனோஜ் விஜயாவை பயமுறுத்துகிறார்;

மனோஜ் விஜயாவிடம் மீனா ஏதாவது லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஏதாவது செய்திருப்பாலோ என விஜயாவை பயமுறுத்துகிறார். விஜயாவும் பயந்து போய்  அப்படியெல்லாம் இருக்காது ஏதாவது கோவில்ல இருப்பா என சமாளித்து செல்கிறார்.

இந்த நிலையில் சிட்டி மீனாவின் தம்பியிடம் அக்காவை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்குமாறு மீனாவின் தம்பி உசுப்பேத்தி விடுகிறார். சிட்டி முத்துவை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற குறிக்கோளோடு கூறுகிறார்.

அதே சமயத்தில் முத்துவின் நண்பன் முத்துவிடம் டைம் ஆகிவிட்டது பேசாம நீ போய் போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிரு என்று கூறுகிறார். இதைக் கேட்டு முத்துவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைக்கான எபிசோட் முடிவடைகிறது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago