சிறகடிக்க ஆசை சீரியல்.. பூஜைக்கு வந்தவர்களை அவமான படுத்தும் விஜயா.!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 3] எபிசோடில் ரோகினி நடத்தும் ஆன்லைன் கிளாஸை விஜயா  திறந்து வைத்தார் .

vijaya (9) (1)

சென்னை – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 3] எபிசோடில் ரோகினி நடத்தும் ஆன்லைன் கிளாஸை விஜயா  திறந்து வைத்தார் .

விளக்கேற்றி பூஜையை துவங்கும் ரோகினி ;

ரவி கிச்சன்ல நவராத்திரிக்காக ஸ்பெஷலா ரெசிபி செஞ்சிட்டு இருக்காங்க.. அவருக்கு சுருதி ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க .இப்போ ஷாப்பிங் முடிஞ்சு ரோகிணியும் மனோஜும் வரங்க.. விஜயா எங்க போயிட்டு வர்றீங்க இரண்டு பேரும் அப்படின்னு கேக்குறாங்க ஷாப்பிங் போயிட்டு வரேன் ஆன்ட்டி. இப்போ மீனா கொலு பூஜைக்காக தயார்படுத்திட்டு இருக்காங்க.. விஜயா சொல்றாங்க ரோகிணி இன்னைக்கு நீதான் விளக்கு ஏத்தணும்.. உடனே முத்துக்கு கோவம் வருது .. என்னப்பா  எல்லாமே பண்றது மீனா ஆனா  முதல் மரியாதை மட்டும் பார்லர் அம்மாவுக்கா..அதுக்கு மீனா சொல்றாங்க யாரு விளக்கு ஏற்றினாலும் விளக்கு எரியும் அவங்களே ஏத்தட்டும் விடுங்க அப்படின்னு சொல்றாங்க. ரோகிணி விளக்கேத்திட்டு விஜயாவுக்கு புதுசா புடவை வாங்கிட்டு வந்து இருக்காங்க.. அதை கொடுக்கவும்  ரொம்ப சந்தோஷப்படுறாங்க.. பெண் கடவுளுக்கு பூஜா நடக்குது இல்ல அதனால தான் ஆண்ட்டிக்கு மட்டும் எடுத்துட்டு வந்தோம் அப்படின்னு சொல்லுறாங்க .

உடனே முத்து சொல்றாரு மனுஷனுக்குள்ள தான் வேறுபாடு இப்போ  சாமிக்குள்ளேயும் வேறுபாட அப்படின்னு கேக்குறாரு ..முத்து எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க அப்படின்னு ரோகினி சொல்றாங்க.  மீனாவுக்கு தெரிஞ்சவங்க எல்லாம் வீட்டுக்கு வராங்க மீனா சந்தோசமா வரவேர்க்குறாங்க..  நேத்து வரல நீங்க அப்படின்னு கேக்குறாங்க வேலை இருந்துச்சு மீனா .இப்ப விஜயா வராங்க யாரு இவங்க அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு ரோகிணி மீனாவுக்கு தெரிஞ்சவங்க, உடனே விஜயா அவங்கள ரொம்ப அவமான படுத்தி  பேசுறாங்க .அவங்களும் மீனா கூப்டனால தான் வந்தோம்னு சொல்லுறாங்க . இப்ப ரோகிணி ஒரு கிப்ட் பாக்ஸ் மாதிரி கொண்டு வந்து ஆன்ட்டி இத நீங்க கட் பண்ணுங்க நான் புதுசா ஆன்லைன் கோர்ஸ் எடுக்க போறேன் நீங்க தான் தொடங்கி வைக்கணும் அப்படின்னு சொல்றாங்க உடனே சந்தோசமா விஜயாவும் அதை ஓபன் பண்ணி வைக்கிறாங்க .இப்போ கொலு முடிஞ்சதும் முத்து  எல்லாரயும்  கார்ல கொண்டு போய் விட போறாங்க ..அதுக்கும் விஜயா பெரிய ராயல் பேமிலி கார்ல தான் போவாங்கலான்னு கேக்குறாங்க ..

vijaya ,Rohini (1) (1) (1)

முத்து மீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் வித்யா  ;

முத்து மீனாவும் அந்த தாத்தா பாட்டியை பார்க்கிறதுக்காக போறாங்க .முத்து அவங்கள பூஜைக்கு   கூப்பிட போறாரு அதுக்குள்ள மீனா கொஞ்சம் இப்படி வரிங்களா அப்படின்னு தனியா கூப்பிட்டு போறாங்க. நீங்க  தாத்தா பாட்டியை வீட்டுக்கு எல்லாம் கூப்பிடாதீங்க உங்க அம்மாவ பத்தி உங்களுக்கு தெரியும்ல .. பாவம்  அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிடுவாங்க அப்படின்னு சொல்ல முத்து  சொல்லுறாரு அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன். இதிலேயே ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வருது மீனா வேணாம்னு சொல்ல முத்து இல்ல நான் கூப்பிடுறேன் சொல்றாரு.. இப்போ பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் சண்டையான்னு வந்து முத்து கிட்ட கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நாங்க சும்மா பேசிட்டு இருக்கோம்னு  சொல்றாரு.. மீனா இதுதான் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே அவங்க தான் இந்த நாலு பேரா அப்படி  கேட்டு உங்க வேலைய போய் பாருங்க அப்படின்னு முத்து அனுப்பிச்சு விட்றாரு..

இப்ப அந்த தாத்தா பாட்டிகிட்ட ரெண்டு பேருமே போயி முத்து சொல்றாரு நான் உங்கள வீட்டுக்கு கூப்பிடலாம்னு நெனச்சேன் ஆனா மீனாதான்  வயசானவங்கள எதுக்கு கஷ்டப்படுத்திட்டீங்கன்னு கேட்டா .. உடனே அந்த தாத்தாவும் பாட்டியும் மீனா சொல்றதும் சரிதான்ப்பா நாங்க வேலையெல்லாம் விட்டுட்டு வரது கொஞ்சம் கஷ்டம் தானே அப்படின்னு சொல்றாங்க..இன்னொரு பக்கம் ரோகினியும்  வித்யாவும் இன்னைக்கு எப்படியாவது அந்த முத்து  செல்ல எடுத்துறணும்னு பிளான் போடுறாங்க.. ரோகினி ஏதோ டான்ஸ் ப்ரோக்ராம்ல  பிளான் பண்ணி வச்சிருக்காங்க ..அத பத்தி வித்யா கிட்ட சொல்ல வித்யாவும் இது நல்ல ஐடியாவா தான் இருக்குடின்னு சொல்லுறாங்க .இதோட  இன்னைக்கு  எபிசோடை முட்டுச்சுருக்காங்க  . நாளைக்கு ப்ரோமோல ரோகினியும் வித்யாவும் முத்து  செல்ல எடுத்து கிச்சன்ல நின்னு பாத்துட்டு இருக்காங்க ..இப்ப வித்யா சொல்றாங்க முத்து மீனா ரொம்ப சந்தோஷமா இருக்கிறாங்கடி இப்ப  வீடியோவை ரிலீஸ் பண்ணனுமா அப்படின்னு கேக்குறாங்க ரோகிணி ஷாக்கா பாத்துட்டு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்