சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை அவமானப்படுத்திய ரோகிணியின் அம்மா.!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 5] எபிசோடில் ரோகினி தன் அம்மாவை வைத்து முத்து மீனாவை அசிங்கப்படுத்தினார்.

muthu,meena (19) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 5] எபிசோடில் ரோகினி தன் அம்மாவை வைத்து முத்து மீனாவை அசிங்கப்படுத்தினார்.

மனோஜ் ஷோ ரூமில் தூங்குகிறார் ;

முத்துவும் மீனாவும் க்ரிஷ் வீட்டுக்கு போய் இருக்காங்க.. கொலு  பூஜைக்கு கூப்பிடுறாங்க முதல்ல ரோகினியோட அம்மா வர மறுக்குறாங்க .. அப்புறம் க்ரிஷ்  ஆசைப்பட்டதும் சரி நீங்க முன்னாடி போங்க நான் வரேன் அப்படின்னு சொல்றாங்க ..உடனே முத்து நீங்க போய் கிளம்புங்கம்மா நாங்க வெயிட் பண்றோம் கார்லயே போயிடலாம்ன்னு சொல்றாரு .. ஷோரூம்ல மனோஜ் உக்காந்து தூங்கிட்டு இருக்காரு ..ஸ்டாப்ஸ் எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டு சிரிச்சிட்டு இருக்காங்க ..இதை பார்த்த ரோகிணி போய் எல்லாரும் வேலைய பாருங்க அப்படின்னு சொல்லிட்டு மனோஜ்  என்ன ஷோரூம் ல இப்படி உட்கார்ந்து தூங்கிட்டு இருக்க.. டயர்டா இருக்கு  ரோகிணி  எனக்கு கொஞ்சம் மசாஜ் பண்ணி விடுறியான்னு கேக்குறாரு.. ரோகினி முறைச்சுட்டு முதல்ல நீ போய் முகத்தை கழுவிட்டு வா அப்படின்னு சொல்றாங்க..

இப்ப ரோகிணி ஓட அம்மா கால் பண்றாங்க கல்யாணி வீட்ல கொலு  வச்சிருக்கீங்களா.. இங்க  முத்து மீனா வந்திருக்காங்க .. வீட்டுக்கு கூப்பிடுறாங்கன்னு சொல்றாங்க ரோகிணியும்  சரின்னு சொல்லிட்டு அப்புறம் பிளான் போட்டு கொடுக்குறாங்க இந்த மாதிரி நீ வந்து பேசணும் அப்படின்னு.. இப்போ ரோகிணி வித்யா கிட்ட இன்னைக்கு முத்தும்  மீனாவும் நல்லா அசிங்கப்பட போறாங்கடி அப்படின்னு சொல்லி சிரிச்சுகிட்டே  போஜய்க்கு  தயார் பண்றாங்க.. முத்து மீனா க்ரிஷ  கிருஷ்ணர் வேடம் போட்டு கூப்பிட்டு வர்றாங்க.. இதை பார்த்து அண்ணாமலை எல்லாருமே நல்லா இருக்குதுன்னு பாராட்டுறாங்க..

Rohini (6) (1)

ரோகிணியின் திட்டம் நிறைவேறியது ;

இப்போ மீனா கிரிஷ்கையாலேயே   எல்லாருக்கும்  பிரசாதம் கொடுக்குறாங்க.. ரோகிணி பக்கத்துல போனதும் கிரிஷ தன்ன மறந்து கட்டிப்பிடிச்சு முத்தம் எல்லாம் கொடுத்துறாங்க ..இத பாத்தா எல்லாருமே  அதிர்ச்சியா பாத்துட்டு இருக்காங்க ..மனோஜ் கேக்குறாரு என்ன ரோகினி திடீர்னு எமோஷனல் ஆகிட்ட  .. இப்போ அண்ணாமலை அத புரிஞ்சுகிட்டு கண்டிப்பா உனக்கு அடுத்த வருஷத்துக்குள்ள கிரிஷ் மாதிரி ஒரு பையன் பிறந்துருவாம்மா அப்படின்னு சொல்றாரு.. இப்போ மீனா பாட்டு பாட ஆரம்பிக்கிறாங்க ..பாட்டு பாடி முடித்ததும்  முத்து  கிரிஷ மடியில் உட்கார வைத்து கொஞ்சிக்கிட்டே இருக்காரு ..பேசாம நீ எங்க கூடவே இருந்துருக்கு நாங்க  நல்லா பார்த்துக்கிறோம் அப்படின்னு சொல்றாங்க..

இப்போ ரோகிணி க்ரிஷோட பாட்டிய பார்த்து கண்ண காட்டுறாங்க .. அவங்களும் முத்துவ திட்ட ஆரம்பிச்சிடுறாங்க.. நிறுத்துப்பா என்ன நெனச்சிட்டு இருக்கீங்க .. சின்ன பையன் மனசுல ஆசை வார்த்தை காட்டி அவனை வச்சுக்கலாம்னு பாக்குறீங்களா அவனுக்கு நானும் அவன்  அம்மாவும் இருக்கிறோம்.. என் மகன் நல்லா சம்பாதிக்கிறா கொஞ்ச நாளைல வந்து அவனை கூப்பிட்டு போய்டுவா .. இனிமேல் தத்தெடுக்குறத  என்கிட்ட பேசாதீங்க எங்க வீட்டு பக்கம் வந்துராதீங்க அப்படின்னு சொல்றாங்க .இப்போ மீனா சொல்றாங்க அப்படி இல்லம்மா நாங்க ஏதாவது தப்பா கேட்டு இருந்தா எங்களை மன்னிச்சிருங்கன்னு சொல்றாங்க..உங்க அக்கறையெல்லாம் போதும் அப்படின்னு சொல்லிட்டு ரோகிணி அம்மா கிரிஷ  கூப்பிட்டு கிளம்பிடுறாங்க இதோட இன்னைக்கு  எபிசோட  முட்டுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்