இந்த காரணத்தினால் தான் உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தாரா சிம்பு!? இந்தியன்-2 அப்டேட்ஸ்!!

Default Image

2.O படத்தின் வெற்றியை தெடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மீண்டும் லைகா நிறுவனத்திற்காக படம் இயக்க உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதன் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமானது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்  ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் சித்தார்த் வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது நடிகர் சிம்புதான். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறினார். இவர் இந்த படத்திலிருந்து வெளியேறிய காரணம் இதுதான் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதாவது, லைகா நிறுவன தயாரிப்பில் ஏற்கனவே சிம்பு செக்கசிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அப்போது வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவருக்கு சம்பள பாக்கி வைத்ததாகவும் ஆதலால் அவர் ஒரு பாடலில் நடிக்க மறுத்து பின்பு சம்பளம் செட்டில் ஆன பிறகு நடித்து கொடுத்ததாகவும், இதானால் மீண்டும் லைகா நிறுவனத்துடன் நடிக்க வேண்டாம் என சிம்பு முடிவு செய்ததால் இந்த படத்தை அவர் மிஸ் செய்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்