விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது.
துப்பறிவாளன் -2 படத்திற்கான புதிய போஸ்டர் அண்மையில் வெளியானது. படம் ஷூட்டிங் ஜனவரியில் தான் தொடங்க உள்ளது. அதற்குள் பட போஸ்டர் ஏன் வெளியிடப்பட்டது என ஒரு காரணம் கோலிவுட்டில் உலா வருகிறது.
அதாவது, விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால், விஷால் நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறதாம்.
அதனால், விஷால் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ள துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வீரமே வாகை சூடும் திரைப்பட வியாபாரத்தை தொடங்கவே விஷால், துப்பறிவாளன் 2 திரைப்பட போஸ்டரை வெளியிட்டதாக கோலிவுட்டில் ஒரு தரப்பு கூறி வருகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…