விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது.
துப்பறிவாளன் -2 படத்திற்கான புதிய போஸ்டர் அண்மையில் வெளியானது. படம் ஷூட்டிங் ஜனவரியில் தான் தொடங்க உள்ளது. அதற்குள் பட போஸ்டர் ஏன் வெளியிடப்பட்டது என ஒரு காரணம் கோலிவுட்டில் உலா வருகிறது.
அதாவது, விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால், விஷால் நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறதாம்.
அதனால், விஷால் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ள துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வீரமே வாகை சூடும் திரைப்பட வியாபாரத்தை தொடங்கவே விஷால், துப்பறிவாளன் 2 திரைப்பட போஸ்டரை வெளியிட்டதாக கோலிவுட்டில் ஒரு தரப்பு கூறி வருகிறது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…