துப்பறிவாளன்-2 போஸ்டர் திடீரென வெளியானது ஏன்?! வெளியானது விஷாலின் மாஸ்டர் பிளான்.!

Default Image

விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது.

துப்பறிவாளன் -2 படத்திற்கான புதிய போஸ்டர் அண்மையில் வெளியானது. படம் ஷூட்டிங் ஜனவரியில் தான் தொடங்க உள்ளது. அதற்குள் பட போஸ்டர் ஏன் வெளியிடப்பட்டது என ஒரு காரணம் கோலிவுட்டில் உலா வருகிறது.

அதாவது, விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால், விஷால் நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருக்கிறதாம்.

அதனால், விஷால் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ள துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வீரமே வாகை சூடும் திரைப்பட வியாபாரத்தை தொடங்கவே விஷால், துப்பறிவாளன் 2 திரைப்பட போஸ்டரை வெளியிட்டதாக கோலிவுட்டில் ஒரு தரப்பு கூறி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்