ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், சூரி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என் படக்குழு அறிவித்துவிட்டது.
சூர்யாவிற்கு தமிழை போல தெலுங்கு சினி உலகிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. சூர்யா படம் நேரடி தெலுங்கு படம் போல வெளியாகும். ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌலியின் RRR திரைப்படம் வெளியாகிறது. ஜனவரி 14ஆம் தேதி பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் மற்றும் பவன் கல்யாணின் பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
ஆதலால், இந்த படங்களுக்கே அங்கு தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என்பதால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்பதால் பிப்ரவரி 4ஆம் தேதியை படக்குழு ரிலீஸ் தேதியாக அறிவித்துவிட்டதாம்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…