95-வது ஆஸ்கர் விருது (அகாடமி விருதுகள்) வழங்கும் விழா மார்ச் 12-ம் தேதி (இந்தியாவில் மார்ச் 13) லாஸ் ஏஞ்சல்ஸ் டோலி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழா பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக அதற்கான முன் ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 81-வது ஆஸ்கர் விழாவில் விருது விழாவில் “ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்திற்காக சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவில் விருது பெற்றிருந்தார். இதன் மூலம், ஆஸ்கர் விருது வாங்கிய முதல் தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். விழாவில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விருது விழாவில் தமிழில் பேசிய காரணம் குறித்து மனம் திறந்து பேசிய வீடியோவை தற்போது ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு முதலில் பின்னணி இசை விருதுக்காக என்னுடைய பெயரை அறிவித்தபோது, இது உண்மையா..? கனவா …? என நினைத்து கொண்டிருந்தேன். பிறகு மேடைக்கு சென்று இயல்பாக பேசினேன்.
நான் கீழே அமர்ந்திருக்கும் போது ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை ஒருவர் மேடையில் ஸ்பானிஷ் மொழியை பேசிக்கொண்டிருந்தார். அவருடைய மொழி அவர் பேசினார். எனவே, நானும் மேடையில் தமிழில் பேசினேன். ஒரு சந்தோஷமான சூழ்நிலையில், நீங்கள் கடவுளை நினைத்தால், கண்டிப்பாக ஒரு துக்க சூழ்நிலையிலும் நீங்கள் நினைக்க வேண்டும். நான் அப்போது சந்தோஷ தருணத்தில் இருந்தேன். அதனால் கடவுளை நினைத்து கொண்டேன் ” என கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…