எங்க போனாலும் அது இருக்கனும்! சூரி போடும் முக்கிய கண்டிஷன்?

Published by
பால முருகன்

சூரி : படப்பிடிப்புக்காக நடிகர் சூரி எங்கு சென்றாலும்  தனக்கு சாப்பிட கஞ்சு வேண்டும் என்று கண்டிஷன் போடுவதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காமெடியான கலக்கி கொண்டு இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கடைசியாக விடுதலை படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்ததாக கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சூரி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகிறார்.

அப்படி தான் சமீபத்தில், ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த  பேட்டியில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு தான் போடும் முக்கிய கண்டிஷன் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய சூரி ” எனக்கு சாப்பிடுவதற்கு கஞ்சி இருந்தால் ரொம்பவே பிடிக்கும். நான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி படப்பிடிப்புக்கு செல்வதற்கு முந்தைய தினமே கஞ்சி அங்கு எங்கயாவது இருக்கிறதா என்று என்னுடைய பசங்களை விட்டு விசாரிப்பேன்.

அப்படி கடைகளில் இல்லை என்றால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் சூரி அண்ணனுக்காக கஞ்சு ரெடி செய்து வைக்க சொல்லுங்கள் என்று என்னுடைய பசங்களிடம் கூறுவேன். என்னுடைய பசங்களும் அங்கு இருக்கும் மக்களிடம் சொல்லிவிடுவார்கள். நான் கேட்டதும் அவர்கள் தங்களுடைய மகனை போல பணம் கூட வாங்காமல் எனக்காக கஞ்சு செய்து கொடுப்பார்கள். எனக்கு அது ரொம்பவே  பிடிக்கும்.

எங்கு போனாலும் சரி எனக்கு கஞ்சி இருந்தே ஆகவேண்டும். ஒரு முறை நான் அஜித் சாருடன் ‘வேதாளம்’ படத்தில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் படத்தின் படப்பிடிப்புக்கு கொல்கத்தாவிற்கு சென்றேன். அங்கு செல்லும்போதே நான் சொல்லிவிட்டேன் எனக்கு கண்டிப்பாக பழைய கஞ்சி இருக்கவேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிட்டேன். அங்கேயும் தமிழர்கள் இருந்தார்கள் அவர்கள் மூலம் எனக்கு சாப்பிட கஞ்சி கிடைத்தது” என்றும் சூரி கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago