வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் சில பிரபலங்கள் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர்கள் யார் யார் என்றால், ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான், ஒருவர் இயக்குனர் கெளதம் மேனன். இருவருமே தளபதி 67 படத்தில் நடிப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்களேன்- விரைவில் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’.! தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் தகவல்.!
மேலும் தளபதி 67 திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் தயார் செய்து முடித்துவிட்டதாகவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தில் ரத்ன குமார் வசனம் எழுதுவதாகவும், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்ற சூப்பர் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். இந்த அப்டேட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் தரமான சம்பவம் காத்திருக்கிறது. என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…