கீர்த்தி சுரேஷ்க்கு கால் செய்த தனுஷ்.! காரணம் என்ன..?

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது வென்றுள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தாக சாணிக் காயிதம், படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர் என்றே கூற வேண்டும். ஏனெனில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆக்ரோசமாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்தை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் கதையை முதலில் கேட்டவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க தயங்கினாராம். அதன் பின், நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேஷிற்கு போன் செய்து “இந்த படத்தின் கதை மிகவும் அருமையான கதை. முழு மனதுடன் நம்பிக்கை வைத்து படத்தில் நடிங்கள்.. ராக்கி இயக்குனர் அருண் மாதேஷ்வரன் எனக்கு தெரிந்த இயக்குனர்.. படத்தின் கதை எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு கண்டிப்பாக செட் ஆகும்” என தனுஷ் கூறினாராம்.

இதனை நடிகை கீர்த்தி சுரேஷே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு தனுஷும் கீர்த்திசுரேஷும் தொடரி படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து படம் நடிக்கவில்லை. இதனால் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

33 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

56 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago