தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் ஆண்ட்ரியா ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது , நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, நடிகை ஆண்ட்ரியா மிகவும் கூலாக சிரித்துகொண்டே பதிலளித்துள்ளார்.
அவர் கூறியது” நான் ஒன்னும் வேணான்னு சொல்லவில்லை… என்னை ஏன் யாரும் கல்யாணம் செய்து கொள்ள வர மாட்டிகாங்கனு … தெரியவில்லை. ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் திருமணம் செய்துகொள்ள தகுந்த நபரை இன்னும் சந்திக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…