நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு.
நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் வெளியாவது சிறிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த ‘கனெக்ட்’ படத்திற்குகடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- கம்பேக் கொடுக்க நினைத்து இப்படி ஆகிவிட்டதே…கடும் சோகத்தில் வடிவேலு..!?
ஏனென்றால், இந்த திரைப்படம் சரியாக 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ‘கனெக்ட்’ திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம். மேலும், இந்த படத்திற்கு இடைவெளி இல்லை என்பதை பற்றி படக்குழு தங்களுக்கு சொல்லவில்லை எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
திடீரென இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளதால், வரும் டிசம்பர் 22-ஆம் தேதி படம் திட்டமிட்ட படி திரையரங்குகளில், வெளியாகுமா..? இல்லையா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விரைவில் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…