சினிமா

சக்கரகட்டி திரைப்படத்தை இயக்கியது இந்த தயாரிப்பாளரின் மகனா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Published by
பால முருகன்

சாந்தனு வேதிகா, இஷிதா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சக்கரக்கட்டி”. இந்த திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் மகனான கலாபிரபு தாணு தான் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த சமயம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் எதோ ஒரு இயக்குனர் என்று தான் பலரும் நினைத்து கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால், இந்த படத்தை இயக்கிய கலாபிரபு தாணு பல ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் மகன் தான்.

அந்த சமயம் கலாபிரபு தாணு இயக்கம் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் “சக்கரக்கட்டி” இயக்கினாராம். இந்த படத்தை அவருடைய தந்தையே தயாரித்தும் இருந்தார். ஆனால், படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை என்றே சொல்லலாம். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்த நிலையில், “சக்கரக்கட்டி” திரைப்படம் பற்றியும் தன்னுடைய மகன் கலாபிரபு தாணு  இயக்கம் மீது கொண்டுள்ள ஆர்வத்தை பற்றியும் கலைப்புலி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய மகனுக்கு சிறிய வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம். அவன் சிறிய வயதில் இருக்கும் போது என்னை பார்க்க வரும் பலரும் அவனிடம் பேசுவார்கள்.

அவனிடம் பேசிவிட்டு என்னிடம் வந்து உன்னுடைய மகன் பெரிய ஆளாக வருவான் அவனுக்குள் நிறைய திறமை இருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால், சினிமாவை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதால் நம்மளுடைய பையன் இங்கு சிக்கவேண்டாம் என்று நினைத்தேன். எனவே அவர் சினிமாவுக்கு வரக்கூடாது என்று தான் நினைத்தேன்.

ஆனால், காலம் செய்த கோலம் தான் அவனை சினிமாவிற்குள் கொண்டு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். “சக்கரக்கட்டி” படம் எல்லாம் முடிந்து ரஹ்மானிடம் செல்கிறது. ரீ ரெக்கார்டிங்காக என்னை அழைத்தார். பிறகு என்னிடம் உங்களுடைய மகனை நான் சாதாரணமாக நினைத்துவிட்டேன் ஆனால், திறமையான ஆளு தான் என்று ரஹ்மான் பாராட்டினார் ‘எனவும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

48 minutes ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

54 minutes ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

2 hours ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

3 hours ago