சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவிடம் அடி வாங்கிய பாடிகாட்.. மனோஜ் பல்பு வாங்கினார். !

சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில்  கீழே விழுந்தார்  பாடிகார்ட்..

muthu,manoj (1) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில்  கீழே விழுந்தார்  பாடிகார்ட்..

ஒரே அடியில் சாய்ந்த பாடிகார்ட் ;

மீனா முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க.. அவருக்கு இது மாதிரி முதுகுல குத்துற பழக்கமெல்லாம் இல்ல அத்தை.. எதுவா இருந்தாலும் அவர் நேருக்கு நேரா பேசிடுவாரு அப்படின்னு சொல்றாங்க. விஜயா சொல்றாங்க முதல்ல நீங்க வீட்டை விட்டு வெளியே கிளம்புங்க .அதுக்கு மீனா சொல்றாங்க செய்யாத தப்புக்கெல்லாம் நாங்க பலி சுமக்க முடியாது அப்படின்னு சொல்றாங்க .இப்ப மனோஜ் சொல்றாரு பேசாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிர வேண்டியது தான்.  இப்ப மீனா முறைச்சுகிட்டே முதல்ல அவர் வரட்டும் அவர் வந்து சொல்லட்டும் அப்படின்னு சொல்றாங்க. இப்ப விஜயா சொல்றாங்க  டேய் அவனுக்கு போன் போடு . அவருக்கு போன் எல்லாம் நீங்க பண்ணாதீங்க அப்புறம் கோவத்துல வந்து உங்க புள்ளைய அடிச்சாலும் அடிச்சிடுவாருன்னு சொல்றாங்க.

நானே போயி அவர சமாதானப்படுத்தி கூப்பிட்டு வர்றேன் அப்படின்னு வெளியில கிளம்புறாங்க இப்ப முத்துவும்  வந்துட்டாரு .மேல ஒரு பஞ்சாயத்தே நடந்துகிட்டு இருக்குது மீனா வீட்டுல நடந்த  பிரச்சினை எல்லாத்தையும் சொல்றாங்க. கோவமா முத்து வீட்டுக்குள்ள போறாரு.. மனோஜ பார்த்து அடிக்கிறதுக்கு துரத்திக்கொண்டு இருக்கிறார்.. ஏண்டா உன்மேல எனக்கு கோவம் இருந்தா உன்னை இப்படி நாலு மிதி மிதிச்சிருவேன் எனக்கு இப்படியெல்லாம் லெட்டர்லாம்   போட மாட்டேன் அப்படின்னு சொல்றாரு .ஆனா விஜயா  சொல்றாங்க எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்குது அப்படின்னு.. இப்ப மனோஜ் பாடிகாட கூப்டு என்னய்யா வேடிக்கை பார்த்துட்டு இருக்க இதுக்கு தான் உன்னை வேலைக்கு வைச்சுருக்கேனே  அப்படின்னு கேட்க ..இல்ல பாஸ் இது உங்க வீட்டு பிரச்சனை நீங்க கூப்பிடாம நான் வர முடியாது அப்படின்னு சொல்றாங்க.

manoj,Rohini (8) (1)

ரோகிணி மீது முத்துவிற்கு சந்தேகம் வந்தது ;

இப்ப முத்துவை அடிக்க சொல்றாரு முத்து அவரையே மேலேயும் கீழேயும் பார்த்துட்டு என்னடா இவ்வளவு பெரிய உருவமா அப்படின்னு பார்க்கிறார். தம்பி தள்ளுப்பா அப்படின்னு சொல்லவும் அதுக்கு பாடிகாட் சொல்றாரு என்ன தாண்டி என் பாச அடிச்சிடுவியா அப்படின்னு கேக்குறாரு ..இப்போ ஒரே அடி தான் அதுல சாஞ்சுறாரு பாடிகாடு எல்லாருமே அதிர்ச்சியா பாத்துட்டு சிரிக்கிறாங்க.. விழுந்த பாடிகார்ட் எந்திரிச்சு உட்கார்ந்துகிட்டு என்னை அடிச்சிட்டாரு அப்படின்னு மனோஜ் கிட்ட சொல்லி அழுகுறாரு. இத பார்த்த விஜயா என்னடா மனோஜ் இப்படி ஒருத்தன வேலைக்கு வைத்திருக்கிற ஸ்கூல் பையன் மாதிரி அழுகுறான்.  மனோஜ் ஒண்ணுமே சொல்ல முடியாம  முழிக்கிறாங்க. இப்ப மீனா சொல்றாங்க எனக்கு என்னமோ அந்த சாமியார் மேல தான் சந்தேகமா இருக்கு அவர்தான் இந்த கடிதாசி போடுற வேலைய பாத்துருப்பாரு  போல.

உடனே முத்து சொல்றாரு ஆமா ஒரு விஷயம் நீ எந்த தப்பும் பண்ணாம  ஏன் உன்னை மெரட்டுறான்.. நீங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தப்பு பண்ணி இருக்கீங்க அது தெரிஞ்சு தான் மிரட்டிட்டு இருக்கிறான் அப்படின்னு சொல்லவும் மனோஜ் சொல்றாரு நான் எந்த தப்புமே பண்ணல நான் தான் தப்பு பண்ண மாட்டிக்கிறேனே அப்படின்னு சொல்றாரு .அப்படியே எல்லாரு பார்வையும் ரோகினிக்கு போகுது.. உடனே  ரோகிணி முறைக்கிறாங்க. இப்போ அண்ணாமலை சொல்றாரு  முத்து எந்த தப்பும் பண்ணலைன்னு தெரிஞ்சிருச்சு .. மனோஜ் நீயும் எந்த தப்பும் பண்ணல அப்புறம் ஏன் உன்னை மெரட்டுறான் பேசாம நீ போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணு அப்படின்னு சொல்றாரு..  ரோகினி தடுக்குறாங்க.. போலீஸ்ல  கம்ப்ளைன்ட் பண்ணா கடைக்கு எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க அப்புறம் வியாபாரம் கெட்டுப் போயிடும் அப்படின்னு சொல்றாங்க .

அதுவுமில்லாம இந்த மாதிரி மெரட்டறவங்க ஃபர்ஸ்ட் கடை வைக்கும்  போது இந்த மாதிரி தான் மிரட்டுவாங்க  நான் பார்லர் வச்சிருந்தப்போ ஃபர்ஸ்ட் இந்த மாதிரி மிரட்டுனாங்க அவங்களுக்கு பயப்படலைனு தெரிஞ்சா  விற்றுவாங்க அப்படின்னு சொல்றாங்க. ஆனா இதெல்லாம் முத்துவும்  மீனாவும் நம்புன மாதிரியே தெரியல இதோட இன்னைக்கு எபிசோட் முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்