Categories: சினிமா

உக்கிரமாக உருவெடுத்த ரத்னம் விஷால்…மிரட்டலாக வெளியான வீடியோ.!

Published by
கெளதம்

மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றியை தொடர்ந்து, புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். விஷாலுக்கு ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு, இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக,  ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு “ரத்னம்” என பெயரிடப்பட்டுள்ளது.

படக்குழு படத்தின் தலைப்பை அறிவிப்பதற்காக ஒரு மிரட்டல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அதிரடியாக வரும் விஷால் தனது எதிரியின் தலையை பட்டா கத்தியால் தனியாக துண்டிக்கிறார். ரத்தம் தெறிக்க படத்தின் தலைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்ல சாப்பாடு போடுங்க…ரசிகையின் குரலை கேட்டு நடிகர் விஷால் செய்த அந்த செயல்.!

இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவை வைத்து பார்க்கும் பொழுது, விஷால் – ஹரியின் மூன்றாவது கூட்டணி மற்றொரு சூப்பர்ஹிட் படத்தை வழங்க காத்திருக்கிறது என்று தெரிகிறது. மேலும், இந்த படம் மூலம் ஹரி தனது பழைய பாணியிலான கமர்ஷியல் படத்தை வழங்கவுள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக தற்போது, திருச்சியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இதற்கிடையில், விஷால் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ‘துப்பறிவாளன் 2’ படமும் கையிருப்பில் உள்ளது.

Recent Posts

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

34 minutes ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

2 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

4 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

4 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

5 hours ago