Categories: சினிமா

விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் – விஷால் பேச்சு.!

Published by
கெளதம்

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் கேப்டனின் நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களுடைய மரியாதையையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று ஜனவரி (19) சென்னை காமராஜர் அரங்கத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல்…உருக்கமாக பேசிய பிரபலங்கள்!

அந்த வகையில், விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், “விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக இருந்தவர். எங்களை மாதிரி’ இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர். தமிழ்நாடு ஒரு தலைவனை மிஸ் பண்ணிடுச்சி. நடிகர் சங்கத்தை மீட்டு ஒரு குடும்பமாக கொண்டுவந்தார்.

இவர் செய்த சாதனைகளை இந்தியாவில் யாரும் செய்ததில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிப்பது என் கடமை, அவரது படத்தில் நடிக்க தயார் என நடிகர் விஷால் ஓபனாக கூறியுள்ளார்.

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

6 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

8 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

9 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

10 hours ago